Episoder
-
துருக்கியைப் பூர்வீகமாகக்கொண்ட ‘ஐஷீகுள் சவாஸ்’ என்ற எழுத்தாளர் எழுதிய ’The Anthropologists’ என்ற நாவலைப்பற்றி இம்முறை உரையாடியிருக்கிறோம்.
சென்ற வருடம் வாசித்தவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. புதிய வடிவம். ஒரு புதிய நகரிலே (அது பாரிசாக இருக்கலாம்) இளம் தம்பதி ஒன்று எப்படி வாழ்வை ஆரம்பிக்க முனைகிறது என்ற எளிமையான களத்தைக் கொண்ட நாவல் இது. ஆசியாவும் மானுவும் புதிய நகரில் தாம் குடியிருக்க சிறு வீடு ஒன்றைத் தேடுகிறார்கள். நகரில் நண்பர்களை உருவாக்குகிறார்கள். பூங்காகளில் உலாவுகிறார்கள். மேல் வீட்டு பாட்டியோடு நட்பாகிறார்கள். ரவி என்கின்ற நண்பனோடு கஃபேகளிலும் மதுபான விடுதிகளிலும் காலத்தைப் போக்குகிறார்கள். ஆசியா தன்னுடைய கற்கை நெறிக்காக ஆவணப்படம் ஒன்றுக்கான காணொளிகளைத் தயாரிக்கிறாள். அதற்காக பல்வேறு விடயங்களைப் பதிவு செய்கிறாள். ஆசியாவின் பார்வையில்தான் நாவல் நகர்கிறது. அவள் தன்னைப் பார்ப்பது, மற்றவர்களைப் பார்ப்பது, சூழலையும் வாழ்வினையும் பார்ப்பது, கனவுகள் காண்பது என்ற ஒருவித navalgazing நாவல் இது. மிக இயல்பான, அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லாத, வாழ்வின் அன்றாட சலனங்களைப் பதிவுகளால் நிறைத்த நூல். A pleasant and thought provoking piece.
நியூ யோர்க்கர் சஞ்சிகையில் சவாஸ் முன்னர் எழுதிய ‘Future selves’ சிறு கதைதான் இப்போது ’The Anthropologists’ என்கின்ற நாவலாக விரிவடைந்திருக்கிறது. நான் அச்சிறுகதையையும் வாசித்திருக்கிறேன். அச் சிறுகதை எப்படி புதிய வடிவத்தைக் கொண்ட இந்நாவலாக மாறியது என்பதை உணரும்போது ஆச்சரியமும் புன்னகையும் தோன்றியது. சவாசுக்கு எழுத்துப் பற்றிய எந்த அவசரங்களோ பதட்டங்களோ இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ளவும் முடிந்தது.
சொல்லப்போனால் ஒவ்வொரு எழுத்தாளர்களுமே ஒரு வகையில் ‘anthropoligists’தான். வாசிக்கும் கணத்தில் வாசிப்பவருக்கும் அந்நோய் தொற்றிவிடுகிறது. எழுத்தினதும் வாசிப்பினதும் அற்புதம் இது.
-
அருந்ததி ரோய் எழுதிய Mother Mary Comes To Me நூலை மையமாக வைத்து, தாய்–மகள் உறவின் சிக்கல்களையும், அன்பும் வன்முறையும் ஒரே நேரத்தில் கலந்து நிற்கும் அந்த முரண்பட்ட வெளிகளையும் ஜீவியும் ஜேகேயும் இந்த உரையாடலில் ஆராய்கிறார்கள்.
பொதுவாழ்வில் பெண்ணியவாதியாகப் போற்றப்பட்டவராகவும், வீட்டிற்குள் குழந்தைகளை வன்முறைக்குள்ளாக்கிய தாயாகவும் இருந்த மேரி ரோயைத் தாயாகக் கொண்ட மகளாக, அந்த முரண்பாட்டை அருந்ததி ரோய் எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்பதே இந்த நூலின் மையம். இந்திய அடிப்படைவாத சமூகச் சூழலில், குறிப்பாகச் சிறுபான்மை சமூகங்களில், பெண்கள்மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்புகள், குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணின் மன உலகை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் இந்த உரையாடல் தொட்டுச் செல்கிறது.
“அவளே என் புயலும்; அவளே என் அடைக்கலமும்” என்ற அந்தச் சிக்கலான உறவை, அருந்ததி ரோய் தனது நேர்மையான மொழிநடையால் எவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பதைக் கேட்கும் ஒரு பயணம் இது.
Amplify Bookstore
Penguine Bookstore
www.padalay.com
-
Manglende episoder?
-
The things that helped us get through 2025.
இந்த வருடம் எம் இருத்தலுக்கும் இயங்கலுக்கும் துணைபோன விசயங்கள்.
ஜீவி, ஸம்ரக்ஷணா & ஜேகே
-
காலித் ஹொசெயினி எழுதிய ‘The Kite Runner’ நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம். ஆப்கானைச் சேர்ந்த அமீரின் சிறுவயது காபுல் வாழ்வும் அங்கு அவன் நண்பன் ஹசனுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்த பாதிப்பும் வாழ்வு முழுதும் அது எப்படி அவனைத் துரத்துகிறது என்பதைப் பேசும் நாவல் இது. அதற்கான பரிகாரத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பம அமீருக்கு எப்படிப் பின்னாளில் ஏற்படுகிறது, அதற்குப்பின்னர் என்ன என்பதுதான் இந்நாவல். அமீரின் வாழ்க்கையுனூடாக நாவல் ஆப்கான் வாழ்வின் சில பகுதிகளையும் புலம்பெயர் வாழ்வின் பண்புகளையும் பேசுகிறது.
-
ஜூம்பா லாஹிரியை வாசித்தல் என்பது தனி அனுபவம். பேரமைதியும் பெரும் பிரளயமும் நிறைந்து கிடக்கும் மனிதர்களைப் பாத்திரமாக்குபவர் லாஹிரி. அவருடைய Unaccustomed Earth தொகுப்பிலிருக்கும் "Once in a lifelite" கதையைப்பற்றிய பார்வை இது.